search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் மெல்லிசை கலை நிகழ்ச்சிகள்
    X

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் மெல்லிசை கலை நிகழ்ச்சிகள்

    சென்னை மாநகரில் வசிக்கும் மெட்ரோ ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெறும் இசை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா மற்றும் தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை கலை குழுவினருடன் இணைந்து மெல்லிசை கலை நிகழ்ச்சியை பின்வரும் தேதிகளில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடத்துகிறது. அதன் விவரும் வருமாறு:-

    வருகிற 23-ந் தேதி உயர் நீதிமன்றம் மெட்ரோ ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 30-ந் தேதி மெட்ரோ ரெயில்-நீல வழித்தடம் (விமான நிலையம்-விம்கோ நகர் பணிமனை மெட்ரோ) ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், ஆகஸ்டு 6-ந் தேதி கிண்டி மெட்ரோ ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 13-ந் தேதி திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 20-ந் தேதி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 27-ந் தேதி மெட்ரோ ரெயில் பச்சை வழித்தடம் (விமான நிலையம்-புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ) ரெயில் நிலையம்-மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடக்கிறது.

    சென்னை மாநகரில் வசிக்கும் மெட்ரோ ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெறும் இசை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×