search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்சி கொடி நடுவதுடன் மரமும் நட கமல் கோரிக்கை
    X

    கட்சி கொடி நடுவதுடன் மரமும் நட கமல் கோரிக்கை

    • மய்யத்தை நோக்கிவரும் இளைஞர்களை இருகரம் கூப்பி வரவேற்று உரிய வாய்ப்பளிக்கவேண்டும்.
    • கொடிக்கம்பங்கள் நடுவதோடு மரக்கன்றுகளையும் நடவேண்டும்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிக்காக மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகிகள் மாவட்டந்தோறும் பயணித்து கூட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று முதல் அடுத்த 12 நாட்களுக்கு நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. முதல் நாளான நேற்று ராசிபுரத்தில் (நாமக்கல்) நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் கமல்ஹாசன் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

    மய்யத்தை நோக்கிவரும் இளைஞர்களை இருகரம் கூப்பி வரவேற்று உரிய வாய்ப்பளிக்கவேண்டும்; கொடிக்கம்பங்கள் நடுவதோடு மரக்கன்றுகளையும் நடவேண்டும்; அனைவரையும் அரவணைத்து கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி மய்ய நிர்வாகிகளை ஊக்கப்படுத்தினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×