search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் கனமழை- ஹைவேவிஸ், மேகமலை அணைகளுக்கு நீர் வரத்து
    X
    மேகமலை அருவியில் ஆனந்தமாக நீராடிய சுற்றுலா பயணிகள்.

    தேனி மாவட்டத்தில் கனமழை- ஹைவேவிஸ், மேகமலை அணைகளுக்கு நீர் வரத்து

    • கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இந்த அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
    • விடுமுறை தினமான நேற்று மேகமலை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    உத்தமபாளையம்:

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஹைவேவிஸ், மேகமலை வனப்பகுதியில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த வனப்பகுதியில் 7 மலை கிராமங்கள் உள்ளன. ஹைவேவிஸ், மேகமலை, வெண்ணியாறு, இரவங்கல் ஆறு, மகாராஜ மெட்டு ஆகிய 5 அணைகள் உள்ளன. கடந்த 1 மாதத்துக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தாமதமானதால் இந்த அணைகள் வறண்டு காணப்பட்டன.

    கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இந்த அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. விடுமுறை தினமான நேற்று மேகமலை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    இதே போல கோம்பைத் தொழு அருகே மேகமலை அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சாரல் மழை பெய்து வந்த போதிலும் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி சென்றனர்.

    தொடர்ந்து தேனி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அணைகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×