என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ப்ரீ பயர் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் ஆன்லைனில் எப்படி கிடைக்கிறது?- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
- ப்ரீ பயர் விளையாட்டுகளால் இளைய சமுதாயம் தவறான பாதைக்கு செல்வதை ஏற்க இயலாது.
- சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுரை:
நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் எனது மகள் கடந்த 6-ந்தேதி முதல் காணவில்லை. இது குறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனது மகள் 'பப்ஜி' மற்றும் 'ப்ரீ பயர்' ஆகிய ஆன்லைன் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதன் மூலம் என் மகளுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. எனவே அவர் தான் எனது மகளை கடத்தியிருக்க வேண்டும். எனவே எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளான ப்ரீ பயர் போன்றவை மத்திய அரசால் தடை செய்யப்பட்டு விட்டது.
இருந்த போதும் இந்த விளையாட்டு எப்படி ஆன்லைனில் கிடைக்கிறது? இது போன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் தவறான பாதைக்கு செல்வதை ஏற்க இயலாது.
சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நீதிபதிகள் இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்