என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கே.கே.நகரில் டாஸ்மாக் கடையில் தீ விபத்து
- சென்னை கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
- கடையில் இருந்த ஏராளமான மதுபாட்டில்கள் வெடித்து சிதறியது.
போரூர்:
சென்னை கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் கடையில் இருந்து கரும்புகை கிளம்பியது பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து மள மளவென எரிய தொடங்கியது.
இதை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் அசோக் நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மதுபான கடை அருகில் உள்ள பார் ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதில் கடையில் இருந்த ஏராளமான மதுபாட்டில்கள் வெடித்து சிதறியது. மேலும் அங்கிருந்த "ப்ரீசர் பாக்ஸ்" உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமானது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.
இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் ராமதுரை கே.கே நகர் போலீசில் புகார் அளித்தார். கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஏற்பட்ட மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்