search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்
    X

    கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்

    • சுதந்திர தினமான இன்று மாலை 5 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேனீர் விருந்து அளிக்கிறார்.
    • தேனீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தேனீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.

    சென்னை:

    சுதந்திர தினம், குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் சுதந்திர தினமான இன்று மாலை 5 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேனீர் விருந்து அளிக்கிறார்.

    இந்த தேனீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தேனீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.

    தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர் கடந்த தமிழ் புத்தாண்டு அன்றும் தேனீர் விருந்து அளித்திருந்தார். அப்போது தமிழக அரசு தேனீர் விருந்தை புறக்கணித்து இருந்தது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்கவில்லை.

    தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் தேனீர் விருந்தை புறக்கணித்து இருந்தனர்.

    நீட் மசோதாவை நீண்ட நாட்களாக கவர்னர் கிடப்பில் போட்டு வைத்திருந்ததை சுட்டிக்காட்டி இதன் காரணமாகவே தேனீர் விருந்தை புறக்கணித்துள்ளோம் என்று அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×