search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் 38 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விரைவில் ஏலம்
    X

    தமிழகத்தில் 38 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விரைவில் ஏலம்

    • மூடப்பட்ட மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூட வசதியுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.
    • ஒப்பந்தப்புள்ளி மற்றும் மறு ஒப்பந்தப் புள்ளியின் காலம் டிசம்பர் 2023 முடிய உள்ள காலம் வரை இருத்தல் வேண்டும்.

    சென்னை:

    டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் 38 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

    30 மாவட்டங்களுக்கு மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கான ஒப்பந்ததாரர் தேர்வு செய்ய வேண்டி அறிவுறுத்தப்பட்டு, முறையே இரண்டு வரு டங்களுக்கான ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டு மதுக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மதுக்கூடங்கள் மூடப்பட்ட நிலையிலும் மற்றும் மதுக்கூட இடவசதி இருந்தும், டெண்டர் பெறப்படாமல் உள்ள மதுக்கூடங்கள் தற்போது செயல்படாமல் உள்ள நிலையில் உள்ளது என மாவட்ட மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மூடப்பட்ட மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூட வசதியுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.

    ஒப்பந்தப்புள்ளி மற்றும் மறு ஒப்பந்தப் புள்ளியின் காலம் டிசம்பர் 2023 முடிய உள்ள காலம் வரை இருத்தல் வேண்டும்.

    மேலும் மதுக்கூட ஒப்பந்தம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள 8 மாவட்டங்கள் அதாவது சென்னை வடக்கு, தெற்கு, மத்திய, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, கிருஷ்ணகிரி மற்றும் அரக்கோணம் போன்ற மாவட்டங்களுக்கு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டப்படி புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்திடவும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன், டாஸ்மாக் பார் ஏலத்தை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    டாஸ்மாக் பார் ஏலத்தில் கடந்த முறை பல்வேறு தடைகள், குறுக்கீடுகள் இருந்தன. இதனால் டெண்டர் முறைப்படி நடத்தவில்லை. பல இடங்களில் விண்ணப்பப் படிவங்கள் கூட பார் உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் அறிவிப்பில் எந்தவித முறைகேடும் இன்றி வெளிப்படையான முறையில் ஏலத்தை நடத்த வேண்டும்.

    முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு முறைகேடு நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு பார் உரிமையாளர்களின் இந்த கோரிக்கையை ஏற்று அரசியல் தலையீடு இல்லாமல் ஏலத்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×