என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
- மது பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மது பிரசாத்தை தாயார் டியூசனுக்கு செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
- ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து டியூசனுக்கு செல்லாததால் தாயார் அவரை கண்டித்துள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் டிவிடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி பானு. இவர்களுக்கு மது பிரசாத் வயது 15 என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
பத்மநாபன் தஞ்சாவூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். வீட்டில் பானு அவரது மகன் மற்றும் மகளும் இருந்தனர்.
மது பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மது பிரசாத்தை தாயார் டியூசனுக்கு செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து டியூசனுக்கு செல்லாததால் தாயார் அவரை கண்டித்துள்ளார்.
தாயார் கண்டித்ததால் மது பிரசாத் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம்போல் இரவு தூங்க சென்றார். இன்று அதிகாலையில் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவரது அறை கதவை திறந்து பார்த்தபோது மது பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதை பார்த்து அவரது தாயார் மற்றும் சகோதரி கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய மது பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்