search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
    X

    தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

    • கூட்டத்திற்கு சங்க தலைவர் வையாபுரி தலைமை வகித்தார்.
    • பொய்யேரி, குப்புச்சி பாளையம் மற்றும் வேலூர் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேராததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


    பரமத்திவேலூர்:


    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டையில் உள்ள வெற்றிலை விவசாயிகள் சங்க அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


    கூட்டத்திற்கு சங்க தலைவர் வையாபுரி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் நடராஜன் முன்னிலை வைத்தார். சங்க செயலாளர் நடேசன் வரவேற்றார். ராஜா வாய்க்காலில் கடைமடை பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் செல்லவில்லை. குறிப்பாக பொய்யேரி, குப்புச்சி பாளையம் மற்றும் வேலூர் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேராததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


    எனவே சம்பந்தப்பட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேருவதற்கான நடவடிக்கை களை நீர்வளத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கம் சார்பில் பரமத்தி வேலூரில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×