search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
    X

    அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்த காட்சி. 

    திண்டிவனத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

    • திண்டிவனத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இரவு நேரத்தில் மின்விளக்கு கள் சரியாக எரியாததால் எங்க தொட்டாலும் ஷாக் அடிக்கிறது.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் அரசு கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இங்கு 75 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இன்று காலை கல்லூரி செல்லாமால் மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்த னர். அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நல்ல முறையில் இல்லாததால் அவர்கள் உணவை சாப்பிட மறுத்து திடீரென உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன் மற்றும் ரோசணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் ஆகியோர் நேரில் சென்று, மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது, மாணவர்கள் விடுதியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் சரியான முறையில் இல்லை. மேலும் எங்களுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவும் நல்ல முறையில் இல்லை. அதோடு இரவு நேரத்தில் மின்விளக்கு கள் சரியாக எரியாததால் எங்க தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. எங்களால் படிக்க முடியாமல் போய்விடுகிறது. மேலும் விடுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவு கிறது. ஆகையால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்தால் தான் போராட்டத்தை கைவிடு வோம் என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து தனிதா சில்தார் கூறுகையில் இன்னும் ஒரு வாரத்தில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும், புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதையேற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து, உணவை சாப்பிட்டனர்.

    Next Story
    ×