search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் தக்காளி விலை திடீர் உயர்வு
    X

    தருமபுரியில் தக்காளி விலை திடீர் உயர்வு

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
    • தக்காளிகளை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டதால் அழுகி வீணாகி வந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, இண்டூர், நாகதாசம்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, பெலமாரம்பட்டி, திருமல்வாடி, காரகூர், பாளையம், பெரியனூர், ஜக்க சமுத்திரம், கொளசன அள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, ஐந்து மைல்கள், ஜிட்டான்ட அள்ளி, வெளிச்சந்தை, கம்பைநல்லூர், உள்ளிட்ட தக்காளி மார்க்கெட்டிற்கு 100 டன் முதல் 150 டன் வரை விற்பனைக்கு வருகிறது.

    இங்கிருந்து தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் சீரான பருவமழை பெய்ததால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் விவசாயி களுக்கு அறுவடை கூலி கூட கிடைக்காததால் தக்காளிகளை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டதால் அழுகி வீணாகி வந்தது.

    சமீபத்தில் பெய்த மழைக்கு பின்னர் தொடர்ந்து பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் தக்காளி பழங்கள் செடிகளி லேயே அழுகி கருகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தக்காளி மார்க்கெட்டிற்கு தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இன்று உழவர் சந்தையில் 18 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையும், வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×