search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த காவலாளி திடீர் சாவு
    X

    மாரடைப்பால் இறந்த ரமேஷ்பாபு

    அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த காவலாளி திடீர் சாவு

    • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணியில் இருந்த வாலிபர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
    • நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்த தண்டபாணி மகன் ரமேஷ்பாபு(38).

    இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவி உள்ளார். இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் பணியில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாரடைப்பால் ரமேஷ்பாபு உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×