search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் கொய்மலர், காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்
    X

    கோப்பு படம்

    கொடைக்கானலில் கொய்மலர், காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்

    • கொடைக்கானல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடி செய்ய மானியத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • தேர்வு செய்யப்பட்டு திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என கொடைக்கானல் தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்து ள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வட்டாரத்தில் ேதாட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடி செய்ய மானியத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023 தேசிய ேதாட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் வீரிய உயர் ரக காய்கறி விதைகள் பரப்பு விரிவாக்கத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மானியம், அவக்கோடா கன்றுகள் ஒரு ஏக்கருக்கு ரூ.5,760 மானியம் வழங்கப்பட உள்ளது. மிளகு சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் நாற்றுகளுடன் கூடிய மானியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் புதிதாக எலுமிச்சை, டிராகன்பழம், ஸ்டாபரி போன்ற பழ வகைகளின் உற்பத்தியை அதிரிக்க மானியம் வழங்கப்பட உள்ளது.

    பசுமை குடில் அமைத்து கொய்மலர் மற்றும் காய்கறி சாகுபடி செய்ய 1000 சதுர மீட்டருக்கு ரூ.4,67500 மானியம் வழங்கப்பட உள்ளது. பண்ணைக்குட்டை அமைத்திட ரூ.75 ஆயிரம் மானியமும், தேனீ வளர்ப்பதை ஊக்குவிக்க தேனீ வளர்ப்பு பெட்டிகளும் மானியத்தில் வினியோகி க்கப்பட உள்ளது.

    மேலும் சிப்பம் கட்டும் அறை ஒன்றுக்கு ரூ.2 லட்சமும், நிரந்தர மண்புழு கூடாரம் அமைக்க ஒரு எண்ணுக்கு ரூ.50 ஆயிரமும் மானியமாக வழங்கப்பட உள்ளது.

    பூண்டு, பழ பயிர் சாகுபடி மற்றும் பாரம்பரிய காய்கறிகள் பயிரிட ஒரு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். மேலும் நிரந்தர பந்தல் அமைத்து காய்கறி பயிர் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டருக்கு ரூ.2 லட்சம் வரை மானியமும் விவசாய முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த இன கவர்ச்சி பொறி மற்றும் மஞ்சள் ஒட்டுப்பொறி ஆகியவை மானியத்தில் வழங்கப்படும்.

    விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்து கொண்டும் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்தும் தங்களது சிட்டா, அடங்கல், ரேசன் கார்டு, ஆதார் கார்டு நகல், புகைப்படம் 2, வங்கி கணக்கு முதல்பக்க நகல் ஆகியவற்றை சமர்ப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என கொடைக்கானல் தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×