என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டி தவறவிட்ட ரூ.5 ஆயிரத்தை மீட்டு ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர்
- மூதாட்டி ஒருவர் தவறவிட்ட பணத்தை தேடி அலைவதை அறிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முத்துலட்சுமியை தேடி கண்டுபிடித்து அவரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார்.
- பணத்தை பெற்றுக்கொண்ட முத்துலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு சமீபத்தில் நெல்லை அரசு மருத்துவமனையில் குடல் வால்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ரூ.5 ஆயிரம்
இதற்காக அவரை கவனிப்பதற்காக அவரது தாயார் முத்துலட்சுமி உடனிருந்து அவரை கவனித்து வந்துள்ளார். அவர் தனது செலவுக்காக வைத்திருந்த ரூ.5000-த்தை மருத்துவமனை வளாகத்தில் தவறவிட்டுள்ளார்.
அதேசமயம் மருத்துவமனை வளாகத்தில் பணியில் இருந்த ஐகிரவுண்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அங்கு கிடந்த ரூ.5 ஆயிரம் பணம் கீழே கிடந்ததை பார்த்து அதை எடுத்தார்.
இதற்கிடையே மூதாட்டி ஒருவர் தவறவிட்ட பணத்தை தேடி அலைவதை அறிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முத்துலட்சுமியை தேடி கண்டுபிடித்து அவரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார்.
பணத்தை பெற்றுக்கொண்ட முத்துலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டரை டாக்டர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்