search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஸ்டூடியோ உரிமையாளர் பலி
    X

    நெல்லை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஸ்டூடியோ உரிமையாளர் பலி

    • நெல்லையை அடுத்த சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). இவர் கங்கணாங்குளத்தில் ஸ்டூடியோ நடத்தி வந்தார்.
    • சுத்தமல்லியை அடுத்த பழவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). இவர் சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கணாங்குளத்தில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 30-ம் தேதி சுத்தமல்லியை அடுத்த பழவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×