search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் ஓட்டல் முன்பு நின்ற தொழில் அதிபர் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை
    X

    கொள்ளையடிக்கப்பட்ட காரை படத்தில் காணலாம்.

    திண்டிவனம் ஓட்டல் முன்பு நின்ற தொழில் அதிபர் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை

    • சதீஷ்குமார் புதுவையில் இருந்து சென்னைக்கு வேலை காரணமாக காரில் சென்றுள்ளார்.
    • காரில் இருந்த 5000 ரூபாய் பணம் 55 ஆயிரம் மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் திருடு போனது.

    விழுப்புரம்:

    புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 41). தொழில் அதிபர்.இவர் புதுவையில் இருந்து சென்னைக்கு வேலை காரணமாக காரில் சென்றுள்ளார். திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் சாப்பிடுவதற்காக இரவு தன் காரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது தன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் காரில் இருந்த 5000 ரூபாய் பணம் 55 ஆயிரம் மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் திருடு போனது தெரியவந்தது. திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் புகாரின் பெயரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்துசிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்திமர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×