search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழசிராமணியில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள சாக்கடையால் துர்நாற்றம்
    X

    சோழசிராமணியில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள சாக்கடையால் துர்நாற்றம்

    • சோழசிராமணியில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள சாக்கடையால் துர்நாற்றம் வீசிவருகிறது.
    • குடிநீரை பொதுமக்கள் குடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி மெயின் ரோட்டில் இருந்து காவிரி ஆற்று கரைக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சாக்கடை கால்வாய் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை சரிவர செய்து முடிக்காததால் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்லும் பாதையில் துர்நாற்றம் வீசிவருகிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் சாக்கடை நீர் இறங்குவதால் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் குடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை முழுமையாக கட்டி சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×