என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையநல்லூரில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
- கடையநல்லூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்
- கடையநல்லூர் நகர் முழுவதும் முக்கிய வீதி வழியாக சென்று போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாணவி மற்றும் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜா புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் ஆகியோரின் உத்தரவின் பேரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்களதுரை ஆகியோர் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசியர் ராஜன்,மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜன் கலந்துகொண்டு கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றி மாணவரிடம் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். கடையநல்லூர் நகர் முழுவதும் முக்கிய வீதி வழியாக சென்று போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இதுபோன்று கடையநல்லூர் பேட்டை பகுதி முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேட்டை முழுவதும் பேரணியாக சென்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்