search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளை மனோ கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்த படம்.


    திசையன்விளை மனோ கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

    • மனோ கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • முகாமிற்கு திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேம்பர்செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோ கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேம்பர்செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நாட்டுநல பணி திட்ட அலுவலர் யூகேஷ்வர வேற்று பேசினார். போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் பெருமாள், செண்பகவல்லி ஆகியோர் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினர்.

    முகாமில் வியாபாரிகள் சங்க பேரமைப்பு மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன், வியாபாரிகள் சங்க பேரமைப்பு திசையன்விளை தலைவர் சாந்தகுமார், சங்க செயலாளர் ஜெயராமன், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன், ஆறுமுகநயினார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×