search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்
    X

    ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நடைபெற்றது.

    தஞ்சையில், வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்

    • குடியிருப்பவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு.தாரேஸ் அகமது தலைமையில் மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இக்கூட்டத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நமக்கு நாமே திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், பொதுப்பணித்துறை போன்ற இடங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு.தாரேஸ் அகமது தெரிவித்தார். முன்னதாக அவர் தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டுறவு காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடக்க பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி ஊராட்சி ஒன்றியங்களில் களத்தூர், ஒட்டங்காடு, ரெட்டைவயல், காலகம், இரண்டாம்புளிகாடு ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×