search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணப்பாடு கடற்கரையில் மீண்டும் மீண்டும் உருவாகும் மணல் திட்டுகள் - மீனவர்கள் கடும் அவதி
    X

    மணப்பாடு கடலில் உருவான மணல் திட்டுகளை அப்புறப்படுத்தி குவியலாக கரையில் வைத்திருக்கும் காட்சி.


    மணப்பாடு கடற்கரையில் மீண்டும் மீண்டும் உருவாகும் மணல் திட்டுகள் - மீனவர்கள் கடும் அவதி

    • கடற்கரையில் தொடர்ந்து ஏற்படும் மணல் திட்டுகளால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி தான்மீன்பிடிக்க செல்கின்றனர்.
    • எனவே தூண்டில் வளைவு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் விரும்புகின்றனர்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் உடன்குடி ஒன்றியம் மணப்பாடு கடற்கரை கிராமம் பெரும்பாலான மீனவ மக்கள் வசிக்கும் கிராமம் ஆகும்.

    மலை திட்டுகள்

    இங்குஉள்ள 90சதவீதம் மக்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்கின்றனர். சுமார் 500 குடும்பத்தினர் இத்தொழிலை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மீனவர்கள் நாட்டுப்படகுகள், கட்டுமரம் வைத்து தான் மீன்பிடி தொழில் செய்கின்றனர். கடற்கரையில் தொடர்ந்து ஏற்படும் மணல் திட்டுகளால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி தான்மீன்பிடிக்க செல்கின்றனர். படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் திண்டாடுகின்றனர்.

    அவதி

    மணல்திட்டால் படகுகளை தள்ளமுடியாமல் மீனவர்கள் கடும் அவதிபடுகின்றனர் ஒருபுறம், மறுபுறம்மீன்களை சுமந்து செல்லும் நிலை‌யில் தவிக்கின்றனர். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு தூண்டில் வளைவு மட்டுமே. எனவே தூண்டில் வளைவு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் விரும்புகின்றனர். கடலில் உருவாகும் மணல் திட்டுகளை ராட்சச எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி கடற்கரையில் குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர்.

    Next Story
    ×