search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைக்க நிலம் வழங்க தயார்-முன்னாள் அமைச்சர் பூங்கோதை அறிவிப்பு
    X

    மாவட்ட கலெக்டர் ஆகாசிடம் தி.மு.க. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மனு வழங்கிய காட்சி.


    ஆலங்குளம் அருகே சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைக்க நிலம் வழங்க தயார்-முன்னாள் அமைச்சர் பூங்கோதை அறிவிப்பு

    • சர்வதேச அளவில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இலவசமாக 5 ஏக்கர் நிலம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்திலோ அல்லது சிவலார்குளத்திலோ வழங்கிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
    • 5 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க முன்வந்த பூங்கோதை ஆலடி அருணாவை பலதரப்பட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர்.

    தென்காசி:

    தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாசை அவரது அலுவலகத்தில் சந்தித்து தென்காசி மாவட்ட பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கை அடங்கிய மனுக்களை வழங்கினார்.

    அதில், சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்திற்கு தேவையான உதவிகளை ஏற்படுத்திட கோரியும் ஆலடி அருணா அறக்கட்டளை சார்பாக சர்வதேச அளவில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இலவசமாக 5 ஏக்கர் நிலம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்திலோ அல்லது சிவலார்குளத்திலோ வழங்கிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    தென்காசி மாவட்டத்தில் சர்வதேச தளத்தில் அமையவுள்ள விளையாட்டு அரங்கத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க முன்வந்த பூங்கோதை ஆலடி அருணாவை பலதரப்பட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×