search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறால் பண்ணைகள் அகற்றப்படும்
    X

    இறால் பண்ணைகள் அகற்றப்படும்

    • உரிமம் புதுப்பிக்காத இறால் பண்ணைகள் அகற்றப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • உரிமம் புதுப்பித்திட விண்ணப்பிக்கப்பட்டதும், புதிதாக 13 இறால்பண்ணைகள் பதிவு வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதும் அடங்கும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளில், 11 இறால்பண்ணைகள் கடல்சார் நீர்வாழ் உயிரின் வளர்ப்பு ஆணையத்திடமிருந்து உரிய பதிவு பெற்று இயங்கிவரும் இறால் பண்ணைகளாகும். அதில் 8 பதிவு உரிமம் காலாவதியாகி உள்ள இறால் பண்ணைகள். அவைகளின் உரிமம் புதுப்பித்திட விண்ணப்பிக்கப்பட்டதும், புதிதாக 13 இறால்பண்ணைகள் பதிவு வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதும் அடங்கும்.

    இந்த நிலையில் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய தலைவர் மற்றும் கலெக்டர், ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளுக்கு மட்டும் 7-வது மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடத்தப்பட்டுமாவட்டக்குழு உறுப்பினர்களால் ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை ஆய்வு செய்திட உபகுழு அமைத்து கூட்டாய்வு செய்து கூட்டறிக்கை அளித்திட ராமநாதபுரம் வருவாகோட்டாட்சியரை தலைவராக கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த 22.10.2020 அன்று நடைபெற்ற 9- வது மாவட்ட அளவிலான குழுக்கூட்டத்தில் ராமேசுவரம்பகுதியில் உள்ள அனைத்து இறால் பண்ணைகளையும் உபகுழு ஆய்வுக்கு உட்படுத்தியது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ராமேசுவரம்வட்ட த்தில் அனைத்துஇறால் பண்ணைகளை மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களால் ராமேசுவரம்காவல்துறை உதவியுடன் ஆய்வு செய்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, 22.10.2020 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மாவட்ட குழு உறுப்பினர்களால் 16.9.2021 அன்று ( மாவட்ட வருவாய் அலுவலர் நீங்கலாக)மாவட்ட வன அலுவலர், மாவட்ட ஊராட்சி செயலர், வேளாண் இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் (மீன்வளம்) மற்றும் மீனவர் நலத்துறை ஆகியோர்களால் ஆய்வு முடிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்களது கள ஆய்வின் அறிக்கையின் அடிப்படையிலும் மற்றும் அனைத்துமாவட்டகுழு உறுப்பினர்களின் அறிக்கையின் அடிப்படையயிலும் 10- வது மாவட்ட அளவிலான குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டு , அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை அகற்றிடகடல்சார் நீர்வாழ் உயிரினவளர்ப்பு ஆணையச்சட்டம் 2005 - ன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனமாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×