search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்தடை
    X

    மின்தடை

    • பட்டினம்காத்தான், ரகுநாதபுர பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் நகா் மின்பகிா்மான உதவி செயற்பொறியாளா் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டினம்காத்தான் துணை மின்நிலையம் பாரதி நகா் பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (29-ந் தேதி) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக பாரதிநகா், நேருநகா், மகாசக்தி நகா், புலிக்காரத் தெரு, குமரையா கோவில் தெரு, பட்டிணம்காத்தான் வரிவசூல் மையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதே போல் சேதமடைந்து பழுதான உயர் மின் கம்பங்கள் மாற்ற இருப்பதால் ரகுநாதபுரம், உப மின்நிலைய அலுவலகத்துக்கு உட்பட்ட ரகுநாதபுரம், தெற்குகாட்டூர், தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை கும்பரம், இருட்டூரணி, காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, வள்ளிமாடன்வலசை, உத்தரவை ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் நகா் மின்பகிா்மான உதவி செயற்பொறியாளா் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×