என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு
- பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டப்பட்டது.
- அவற்றின் மதிப்பு ரூ.1.16 லட்சம் ஆகும். இதுகுறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் கழனிக்குடியைச் சோ்ந்த சண்முகநாதன் மனைவி ஜனனி (வயது 30). இவா் நேற்று பகல் ராமநாதபுரத்தில் உள்ள வங்கிக்கு சென்றாா்.
மீண்டும் ஊா் திரும்பிய நிலையில், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த தங்கச்சங்கிலிகள், தோடுகள், பதக்கங்கள், மோதிரம், பிரேஸ்லெட் என ஏழரைப் பவுன் எடையுள்ள நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அவற்றின் மதிப்பு ரூ.1.16 லட்சம் ஆகும். இதுகுறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பட்டப்பகலில் மாற்று சாவி மூலம் வீட்டைத் திறந்து மா்ம நபா்கள் நகைகளை திருடி இருப்பது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்