search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1000 கிலோ அரிசியில் நெய் சோறு விநியோகம்
    X

    1000 கிலோ அரிசியில் நெய் சோறு விநியோகம்

    • 1000 கிலோ அரிசியில் நெய் சோறு விநியோகம் செய்யப்பட்டது.
    • 18 வாலிபர்கள் ஷஹீத் வலியுல்லாஹ் தர்காவில் 18 நாட்கள் மௌலீது ஓதப்பட்டு நிறைவாக கந்தூரி விழா நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைத்தெருவில் உள்ள மகான்கள் 18 வாலிபர்கள் ஷஹீத் வலியுல்லாஹ் தர்காவில் 18 நாட்கள் மௌலீது ஓதப்பட்டு நிறைவாக கந்தூரி விழா நடந்தது. இதில் உலக நன்மைக்காக பிராத்தனை செய்தனர்.

    1000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைத்து ஏழை, எளியவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஜப்பார் தலைமை தாங்கினார். குதுபுதீன் ராஜா, சுல்தான் ஒருக்கிணைத்தனர். தர்ஹா பரிபாலன கமிட்டி நிர்வாகிகள் ஹமீத் இப்ராஹிம், சதக் இல்யாஸ், சாகுல் ஹமீத், சீனி தம்பி, ஜாஹிர் ஹுசைன், இப்ராஹிம் நைனா, ராசிக் பரீத், விடுதலை சிறுத்தை கட்சியின் நகர் செயலாளர் பாஸித் இலியாஸ் ஆகியோர் விழாவினை வழி நடத்தினர்.

    Next Story
    ×