search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு
    X

    ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

    • ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பட்டது.
    • இத்தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தினந்தோறும் ஏராள மான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்ய செல்வார்கள்.

    அப்பொழுது, அங்கு சுற்றித்திரியும் கால் நடை களுக்கு பழங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்குவதால் ஏராளமான கால் நடைகள் வேகமாக வந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் உலா வருவதாக தகவல் கிடைக்கப் பெற்றது.

    ராமேசுவரம் நகராட்சி ஆணை யருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சுற்றித்திரியும் கால் நடைகளை அப்புறப்படுத்தி பாம்பன் பசுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இத்தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×