search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை ரெயிலில் இறந்து கிடந்த ரெயில்வே அதிகாரி
    X

    நெல்லை ரெயிலில் இறந்து கிடந்த ரெயில்வே அதிகாரி

    • நெல்லை ஸ்ரீபுரத்தை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 63). இவர் ரெயில்வேயில் அலுவலக சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்
    • காலை ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்த போது கமலா தனது கணவர் சந்திரமோகனை எழுப்பினார்.

    நெல்லை:

    நெல்லை ஸ்ரீபுரத்தை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 63). இவர் ரெயில்வேயில் அலுவலக சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சென்னையில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக சந்திரமோகன் தனது மனைவி கமலாவுடன் சென்றிருந்தார். நேற்று அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊர் திரும்பினர்.

    இன்று காலை ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்த போது கமலா தனது கணவர் சந்திரமோகனை எழுப்பினார். அவர் எழுந்திருக்கவில்லை. ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்றுபார்த்த போது அவர் மரணமடைந்தது தெரியவந்தது. ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×