search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால்  அருகே  லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    காரைக்கால் அருகே லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

    • காரைக்காலை அடுத்த அகரமாங்குடி ஆற்றங்கரை சாலையில் கடந்த ஒரு மாதமாக இரவும் பகலும் லாரிகள் சென்று வருவதால். ஆற்றங்கரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது.
    • லாரி கள் இவ்வழியை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும் என கூறி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், லாரி களை சிறைப்பிடித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்

    புதுச்சேரி:

    காரைக்கால் - பேரளம் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக, மயிலாடுதுறை மாவட்டம் பருத்திகுடி கிராமப் பகுதி யில் உள்ள மண் குவாரியில் இருந்து, மணல் அளவுக்கு அதிகமாக லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக, காரைக்காலை அடுத்த அகரமாங்குடி ஆற்றங்கரை சாலையில் கடந்த ஒரு மாதமாக இரவும் பகலும் லாரிகள் சென்று வருவதால். ஆற்றங்கரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது.

    சாலையில் அதிகப்படியான பள்ளங்கள் தோன்றுவதால், ஆற்று நீர் ஊரில் உட்புகும் அபாய நிலை உள்ளது இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், சாலையை உடனடியாக சீர் செய்து தரவேண்டும். அளவுக்கு அதிகமான லாரி கள் இவ்வழியை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும் என கூறி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், லாரி களை சிறைப்பிடித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். சாலை சீர்செய்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததின் பேரில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு லாரிகளை விடுவித்தனர்.

    Next Story
    ×