search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து  தரக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    X

    மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    பாளையில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா- அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    • பழமை வாய்ந்த இந்த குடியிருப்பு சிதிலமடைந்து காணப்பட்டதால் அந்த குடியிருப்பு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.
    • தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    பாளை சமாதான புரத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் மனு

    பழமை வாய்ந்த இந்த குடியிருப்பு சிதிலமடைந்து காணப்பட்டதால் அந்த குடியிருப்பு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அங்கு வசித்த வந்த பொதுமக்களை தற்காலி கமாக வேறு இடத்திற்கு தங்கி கொள்ள உத்தர விடப்பட்டது. இந்நிலையில் அங்கு பொதுமக்கள் தங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் அமைத்து தர கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    திடீர் தர்ணா

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கட்டிட பணிகள் நடைபெறும் 3 ஆண்டுகள் தற்காலிகமாக வேறு இடத்தில் தங்கி கொள்ளவும் அதற்கான வாடகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட னர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 100 குடும்பத்தை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தற்போது மாநகராட்சி சார்பில் புதிதாக குடியிருப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் எங்களை தற்காலிகமாக வேறு இடத்திற்கு வசித்து கொள்ள கேட்டுக்கொண்டனர்.

    இதற்காக வாடகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வாடகை பணம் தற்போது உள்ள சூழ்நிலைக்கு மிகவும் குறைவாக உள்ளது. பாளை மார்க்கெட்டில் புதிதாக கடை அமைப்பதற்காக வியாபாரிகளுக்கு தற்காலிகமாக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் எங்களுக்கும் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும். அது வரை நாங்கள் வீடுகளை காலிசெய்ய மாட்டோம் என கூறினர்.

    தொடர்ந்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×