என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
- சேலத்தில், 11-ந் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- சாத்தகிராமன் தலைமையிலும் நிதி ஆப்கே நிகட் என்ற தலைப்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
சேலம்:
சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் தளவாய்பட்டியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் வருகிற 11-ந் தேதி மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
அதே நாளில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவ–லகத்தில் அமலாக்க அதிகாரி சுப்ரமணியன் தலைமையிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி சாத்தகிராமன் தலைமையிலும் நிதி ஆப்கே நிகட் என்ற தலைப்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
அன்றைய தினம் காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில் சந்தாதாரர்களுக்கும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்களுக்கும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
எனவே, இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.எண். எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை வருகிற 8-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதேசமயம் ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்திலும் அல்லது ro.salem@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்