search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • மேட்டூரில் கன மழை அதிக பட்சமாக 35.4 மி.மீ.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    ஏற்காட்டில் மழை

    குறிப்பாக மேட்டூரில் நேற்றிரவு கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இேதபோல தம்மம்பட்டி, ஏற்காட்டிலும் மழை பெய்தது. சேலம் மாநகரில் லேசான தூறலுடன் மழை நின்று போனது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

    57.7 மி.மீ. பதிவு

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 35.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தம்மம்பட்டி 10, ஏற்காடு 8, ஓமலூர் 3, காடையாம்பட்டி 1, சேலம் 0.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 57.7 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவியது.

    Next Story
    ×