search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கல்
    X

    பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கினர்.

    பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கல்

    • தேசிய கொடியை ஏற்றுவதை உறுதி செய்யும் வகையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆலோசனையின் பேரில்வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வேடமிட்ட சிறுவன் காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை இணைந்து 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு பிரதமர் மோடியின் வேண்டுகோளான அனைவரும் தங்களது வீடுகளில், அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றுவதை உறுதி செய்யும் வகையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆலோசனையின் பேரில்வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

    இதில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, நகர போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர் .

    நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வேடமிட்ட சிறுவன் காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கியதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள் .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார், அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×