என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிரசவத்துக்கு சென்ற கர்ப்பிணி பெண் சாவு
- இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.
- கவிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ் பாபநாசம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பிரசவத்திற்காக பாபநாசம் கீழ கஞ்சிமேடு மெயின் ரோட்டில் வசித்து வரும் மோகன்ராஜ் (வயது 30) மனைவி கவிதா (22) சேர்க்கப்பட்டார்.
இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். கவிதாவுக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கவிதா இறந்த போய்விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த கவிதாவி னன் உறவினர்கள் மருத்து வமனை முன்பு திரண்டனர். கவிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ் பாபநாசம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாபநாசம் துணை சூப்பிரண்ட் பூரணி, பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப் - இன்ஸ்பெக்டர் இளமாறன், மண்டல துணை தாசல்தார் பிரியா, வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதா இறப்பு குறித்து மருத்துவமனையில் விசாரணை மேற்கொ ண்டனர்.
உறவினர்கள் திரண்டு வந்து கவிதாவின்உடலை வாங்க மறுத்து மருத்துவம னையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இறந்த கவிதாவை பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்