search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில்  நாளை மின்தடை
    X

    விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் நாளை மின்தடை

    • கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

    சிவகிரி:

    கடையநல்லூர் கோட்ட மின் விநியோகம் செயற்பொறியாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது

    இதில் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது எனவும், மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×