search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே சொத்து சேதமாவதை தடுக்க போலீசார் அணிவகுப்பு பயிற்சி
    X

    அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ஆலோசனை

    ரெயில்வே சொத்து சேதமாவதை தடுக்க போலீசார் அணிவகுப்பு பயிற்சி

    • அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ரெயில்வே சொத்து, இடத்திற்கும், ரெயில்வே பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.
    • மேலும் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    திருச்சி மண்டல ரெயில்வே பாதுகாப்பு படை சீனியர் கமிஷனர் ராமகிருஷ்ணன், துணை கமிஷனர் சின்னதுரை ஆகியோரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுதீர்குமார் மேற்பார்வையில் கும்பகோணம் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் துணை சப்- இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், விவேகானந்தன் மற்றும் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ஜவான்கள், போலீசார் ஆகியோர் பொதுமக்களின் அதிக பார்வைக்கு ஏற்புடையதாகவும் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் ரூட் மார்ச் என்ற அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ரெயில்வே சொத்து, இடத்திற்கும், ரெயில்வே பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரெயில்வே நிலையங்களிலும் பாதுகாப்பு படை போலீசாருக்கு அணி வகுப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

    Next Story
    ×