search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
    X

    பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    பா.ம.க. பொதுக்குழு கூட்டம்

    • அதனைத் தொடர்ந்து தெற்கு ஒன்றிய சார்பில் பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.
    • கும்பகோணத்தை புதிய மாவட்டமாக உடனே அறிவிக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பா.ம.க 34ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 10-க்கும் மேற்பட்ட ஊராட்சியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஒன்றிய சார்பில் பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக உடனே அறிவிக்க வேண்டும், கும்பகோணம் மாநகராட்சியிலிருந்து வெளியேற்றும் கழிவுநீர் அனைத்தும் காவிரி ஆறு மற்றும் நாட்டாற்றில் கலந்து ஆற்று நீர் மாசுபடுகிறது. இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதுஎன்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்ப ட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், முன்னாள் மாவட்டசெயலா ளர் ரவிச்சந்திரன்,மாவட்ட தலைவர் திருஞா னம்பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் கோதை கேசவன், மாவட்ட துணை செயலாளர் அரங்க நாகப்பன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன், இளைஞரணி மாவட்டச் செயலாளர் வினோத், உழவர் பேரி யக்கம் மாவட்ட செயலாளர் கருணாகரன் தேவர், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட துணைத் தலைவர் பக்கிரி சாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×