search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில்  கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
    X

    யானை, ஒட்டகங்கள், பசு, குதிரை ஆகியவற்றுடன் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் நடந்த காட்சி.

    குமாரபாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்

    • பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 19-ந்தேதி யாகசாலை கால்கோள் விழாவுடன் துவங்கியது.
    • 29-ந்ேததி முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சியும், நேற்று யானை, ஒட்டகங்கள், பசு மற்றும் கன்று, குதிரைகளுடன் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் செண்ைட மேளங்கள் முழங்க நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் முதலியார் தெரு பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 19-ந்தேதி யாகசாலை கால்கோள் விழாவுடன் துவங்கியது. 29-ந்ேததி முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சியும், நேற்று யானை, ஒட்டகங்கள், பசு மற்றும் கன்று, குதிரைகளுடன் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் செண்ைட மேளங்கள் முழங்க நடைபெற்றது.

    இன்று காலை முதல் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள், சாலுரு புருஹன் மாதா சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டான்மைக்காரர் முருகேசன் காரியக்காரர்கள் பாலசுப்ரமணியம், சண்முகசுந்தரம், தர்மலிங்கம், ஆறுமுகம், தங்கவேல், கேசவராஜ் மற்றும் விழா கமிட்டியார்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×