search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாணார்பட்டி அருகே குடிநீர் பைப்பை சேதப்படுத்தியதால் மக்கள் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை படத்தில் காணலாம்.

    சாணார்பட்டி அருகே குடிநீர் பைப்பை சேதப்படுத்தியதால் மக்கள் போராட்டம்

    • வாய்க்கால் பணியின்போது குடிநீர் தொட்டியின் பைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • 2 நாட்களுக்குள் இந்த பிரச்சினை தீராவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித் துள்ளனர்.

    குள்ளனபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியை அடுத்த செடிப்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

    மேலும் இப்பகுதியில் உள்ள குளத்திற்கு சிறுமலையில் மழை பெய்யும் பொழுது தண்ணீர் வருவதற்காக வரத்து வாய்க்கால் உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் இதனையொட்டி உள்ள இடத்தை ஆக்கிரமித்தனர். மேலும் வரத்து வாய்க்காலை குளத்தில் தண்ணீர் செல்ல விடாமல் அடைத்தனர்.

    இந்த பணியின்போது குடிநீர் தொட்டியின் பைப்புகள் சேதப்படுத்தப்ப–ட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. எனவே ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். மேலும் இது குறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் ெதரிவித்தனர். இன்னும் 2 நாட்களுக்குள் இந்த பிரச்சினை தீராவிட்டால் சாலை மறியலில் ஈடுபட–போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×