என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்-தஞ்சை கலெக்டர் தகவல்
- விருது பெறுவதற்கு தகுதியான சிறந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறந்த சமூக சேவகர்களிடம் இருந்து கீழ்காணும் விவரப்படி இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரங்களும் இருத்தல் வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
சமூக நலம்- மகளிர் நலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனத்துக்கும், பெண்களுக்கான சிறப்பான பணிகளைச் செய்த சிறந்த சமூக சேவகர்களுக்கும் 2022-23-ம் நிதியாண்டில் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்படும் விருது பெறுவதற்கு தகுதியான சிறந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறந்த சமூக சேவகர்களிடம் இருந்து கீழ்காணும் விவரப்படி இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி விருதை பெறுவதற்கு சிறந்த சமூக சேவை நிறுவனம் மற்றும் சமூக சேவகர்களுக்கு உரிய தகுதிகளாக தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவரா–கவும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சமூக நலம் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை , மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றியவராகவும் சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரங்களும் இருத்தல் வேண்டும். தனிநபர் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்கு தமிழக அரசின் விருதுகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், 3-வது தளம் , அறை எண்.303 (தொலைபேசி எண் 04362- 264505) தஞ்சாவூர் என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்