search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு
    X

    புதிதாக கடடப்பட்டுள்ள பாலத்தை படத்தில் காணலாம்.

    புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு

    • குமாரபாளையத்தில் ஆனங்கூர் சாலையில் இருந்து நாராயண நகர் செல்லும் வழியில் பழைய பாலம் மிகவும் சேதமானதால் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறக்கப்பட்டது.
    • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.24 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் ஆனங்கூர் சாலையில் இருந்து நாராயண நகர் செல்லும் வழியில் கோம்பு பள்ளம் உள்ளது.

    இதனை கடக்க இருந்த பழைய பாலம் மிகவும் சேதமானதால் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.24 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் பல மாதங்கள் நீடித்தது. இதனால் பொதுமக்கள் வெகு தூரம் சுற்றி வரும் நிலைக்கு ஆளாகினர்.

    இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    Next Story
    ×