என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓணம் பண்டிகையையொட்டி சேலம் வழியாக மேலும் ஒரு சிறப்பு ரெயில்
- கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருவோணம் வருகிற செப்டம்பர் மாதம் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- அந்த வகையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளாவிற்கு 5 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சேலம்:
கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருவோணம் வருகிற செப்டம்பர் மாதம் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கேரள மக்கள், ரெயில்களில் அதகம்பேர் செல்வது வழக்கம். இதற்காக முக்கிய நகரங்களில் இருந்து ஓணம் பண்டிகை சிறப்பு ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் இயக்குகிறது. அந்த வகையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளாவிற்கு 5 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரெயிலாக பண்டிகை முடிந்தபின் ஊர் திரும்ப வசதியாக மங்களூரு- தாம்பரம் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்களூரு சென்ட்ரல்- தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06050) அடுத்த மாதம் 11-ம் தேதி இயக்கப்படுகிறது.
மங்களூருரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ெரயில் கோழிக்கோடு, பாலக்காடு , கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்திற்கு காலை 7.52 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் 3 நிமிடங்களில் புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக தாம்பரத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்