search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
    X

    சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

    • தேவையான திருத்தங்கள் அளிப்பதற்கு, போலீஸ் நிலை ஆணை தனியாக வெளியிடப்படும்.
    • இதன்மூலம் 10 ஆயிரத்து 508 பேர் பயன் அடைவார்கள்.

    சென்னை :

    தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசும்போது, போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்றும், இதன்மூலம் 10 ஆயிரத்து 508 பேர் பயன் அடைவார்கள் என்றும் அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட்டு வருவதைப்போல, அதே பலன்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அதன்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்திருந்தார். அரசு இதை விரிவாக ஆராய்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடுத்த, முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

    இதற்கு தேவையான திருத்தங்கள் அளிப்பதற்கு, போலீஸ் நிலை ஆணை தனியாக வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×