search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோட்டில்  எஸ்.டி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    பாலக்கோட்டில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • தருமபுரி அருகே எஸ்.டி.பி.ஐ. சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பா.ஜ.க.வினரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இறைத்தூதர் நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்தை வெளியிட்ட பிஜேபி செய்தி தொடர்பாளர்கள் நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் பைரோஸ் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் உ.பி யோகி அரசின் புல்டோசர், காட்டுத்தர்பாரை நிறுத்த கோரியும், மத்திய பாஜக மோடி அரசு பதவி விலக கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

    சிறப்பு அழைப்பாளர் களாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பேச்சாளர் முஹம்மத்உசேன், மாநில செயற்குழு உறுப்பினர் பயாஸ்அஹமத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் ராசகோபால் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

    இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் அதிக்குல்லா, முன்னாள் மாவட்ட தலைவா் ஜாவித், செயற்குழு உறுப்பினர் ஜிலான், துணை செயலாளர் ஹைதர், பொருளாளர் நிஜாம், செயற்குழு உறுப்பினர் அலி, செயற்குழு உறுப்பினர் உமர் பாரூக், ஜமாத் நிர்வாகிகள், மௌஹல்லாவாசிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் நகர செயற்குழு உறுப்பினர் தஜ்மல் நன்றி தெரிவித்தார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×