search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செவிலியர்கள் தர்ணா போராட்டம்
    X

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்.

    செவிலியர்கள் தர்ணா போராட்டம்

    • தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் பணிகளை புறக்கணித்து செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தின்போது வட்டார மருத்துவ அலுவலர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம்சேதுபா வாசத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட அழகிய நாயகி புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கத்தின் அராஜக போக்கை கண்டி த்தும், பெண் ஊழியர்களை இழிவாக பேசுவதை கண்டித்தும் தஞ்சை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலக வளா கத்தில் இன்று தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் பணிகளைப் புறக்கணித்து செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு மாநிலத் தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜெயராணி, செயலாளர் சீதாலட்சுமி, பொருளாளர் திலகவதி, மாநில செயற்குழு உறுப்பினர் உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தின்போது வட்டார மருத்துவஅலுவலர் ராமலிங்கம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.இதில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×