search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளி மர்மச்சாவு
    X

    தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளி மர்மச்சாவு

    • ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் என்பவரும் அங்கு பணியாற்றி வந்தார்.
    • கட்டிடப்பணிகள் நடந்துவரும் இடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் கமலேஷ் இறந்து கிடந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மத்தியபாகம் பகுதியில் பல்வேறு கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.

    ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் (வயது25) என்பவரும் அங்கு பணியாற்றி வந்தார்.இந்நிலையில் மத்தியபாகம் பகுதியில் கட்டிடப்பணிகள் நடந்துவரும் இடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் கமலேஷ் நேற்று மாலை இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சகஊழியர்கள் வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×