search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்- விவசாயி பலி
    X

    விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்- விவசாயி பலி

    • விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்- விவசாயி பலியானார்.
    • விபத்து குறித்து விழுப்புரம் தாலுாகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்டை பரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 40). விவசாயி. இவர் நேற்று காலையில் உளுந்தூர்பேட்டை பகுதியிலிருந்து சென்னை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது விழுப்புரம் அருகே பிடாகம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது, அதே திசையில் சென்று கொண்டிருந்த மற்றொரு மகேந்திரா வேன் ஒன்று வந்து பின்னால் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இந்த விபத்தில் , சம்பவ இடத்திலேயே பார்த்திபன் பலியானார்.தகவல் அறிந்த விழுப்புரம் தாலுாகா போலீசார் இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    விபத்து குறித்து விழுப்புரம் தாலுாகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

    Next Story
    ×