search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே  சமுதாய பண்ணை பள்ளி பயிற்சி  தொடக்கம்
    X

    சமுதாய பண்ணை பள்ளி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

    விக்கிரவாண்டி அருகே சமுதாய பண்ணை பள்ளி பயிற்சி தொடக்கம்

    • விக்கிரவாண்டி அருகே சமுதாய பண்ணை பள்ளி பயிற்சி தொடங்கப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவி ரேவதி ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்

    விழுப்புரம்:

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக விக்கிரவாண்டி அருகே உள்ள கொங்கராம் பூண்டி ஊராட்சியில் சமுதாய பண்ணை பள்ளி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவி ரேவதி ஸ்ரீதரன் தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற செயலாளர் பழனிவேல் வகித்தார்கி ராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயலாளர் ஜெயராணி வரவேற்றார்.விக்கிரவாண்டி வட்டாரத்தின் வட்டார அணித்தலைவர் ஜீவியராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் இதில் ஊராட்சியில் செயல்படும் நெல் உற்பத்தியாளர் குழுக்களின் செயலாளர் திருமதி தேவி பொருளாளர் ராஜ் மற்றும் கரும்பு உற்பத்தியாளர் குழுக்களின் செயலாளர் திருமதி சுகன்யா பொருளாளர் சித்ரா ஆகிய குழுக்களை சேர்ந்த100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயலாளர் ஜெயராணி பொருளாளர் சாவத்திரி மற்றும் வறுமை ஒழிப்பு சங்கம் செயலாளர் தெய்வானை பொருளாளர் மாரி மகளிர் சுய உதவிக்குழுக்கள் இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். சரளா நன்றி கூறினார்.

    Next Story
    ×