என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிடமனேரி ஜங்ஷன் அருகே ஜவுளி நிறுவன அதிபர் ரயிலில் அடிபட்டு பலி
- தருமபுரியில் ரெயிலில் அடிபட்டு ஜவுளி கடை அதிபர் உயிரிழந்தார்.
- இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி ரயில் நிலையம் அடுத்த பிடமனேரி ஜங்சன் குடியிருப்பு பகுதியில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று உள்ளதாக அப்பகுதி மக்கள் போலிசாருக்கு தகவல் தெரிவித்ததுள்ளனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மற்றும் உள்ளூர் போலிசார் சடலத்தை கைப்பற்றி அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன.ர் அப்போது பாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆதார் கார்டை வைத்து சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு தகவல் கொடுத்து விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில் இறந்து கிடந்தவர், தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியைச் சேர்ந்த சென்ன கேசவன் மகன் முகேஷ் குமார் (39). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். முகேஷ் குமார் விருதாச்சலத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருவதாகவும், நேற்று மனைவியிடம் பெங்களூருக்கு டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம் சம்பந்தமாக செல்வதாக கூறிவிட்டு வந்துள்ளது ம்தெரியவந்தது.
தர்மபுரியில் உள்ள இப்பகுதிக்கு முகேஷ் குமார் எதற்காக வந்தார் ?் முகேஷ் குமார் வியாபார நஷ்டத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வியாபார போட்டியின் காரணமாக எதிரிகள் யாரேனும் பின் தொடர்ந்து வந்து அடித்து தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு பிரகு முகேஷ் குமாரின் இறப்பு குறித்து தகவல் வெளியாகும். டெக்ஸ்டைல்ஸ் அதிபர் மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்த கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்