search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரசாமிபேட்டை அருகே  காயங்களுடன் பிணமாக கிடந்த மேஸ்திரி
    X

    குமாரசாமிபேட்டை அருகே காயங்களுடன் பிணமாக கிடந்த மேஸ்திரி

    • சாலையோரம் உடல் முழுவதும் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்துள்ள குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கேசவன். கட்டிட மேஸ்திரி.

    இவர் மாதேஸ்வரா தியேட்டர் அருகே சாலையோரம் உடல் முழுவதும் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீசார் கேசவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் கேசவனை யாரோ அடித்து கொன்று உடலை வீசி விட்டு சென்றுள்ளதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து கேசவன் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா ? அல்லது யாராவது அவரை கொன்று இங்கு கொண்டு வந்து உடலை வீசிவிட்டு சென்றனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×